Thursday 2 January 2014

மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கம்



 
மணிக்கட்டின் மேற்பகுதியில் (Dorsal surface) காணப்படும் முண்டு போன்ற வீக்கம் நரம்பணுத்திரள் வீக்கம்  அல்லது நரம்பு முடிச்சு வீக்கம் எனப்படுகிறது.

(போயரிக் இதனை An necysted tumour on a tendon எனக் கூறுகிறார்)

இத்தகைய முண்டு வீக்கம் மணிக்கட்டின் மேல்புறத்திலோ, (on top of wrist)  கீழ்ப்புறத்திலோ , விரல்கள் முடி வடையும் மூட்டுகளிலோ அரிதாக பாதங்களிலோ உருவாகக்கூடும்.

இது நோயின் விளைவாக தோன்றிய மெல்லிய சுவருள்ள திசுப்பை (cyst) இதனுள்ளே திரவச்சுரப்பு நிரம்பியிருக்கும். இது உருவாவதற்கான தெளிவான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அலோபதி மருத்துவம் குறிப்பிடுகிறது.
      


 இந்த மணிக்கட்டு வீக்கம் பெரியளவில் காணப்பட்டால் வெளிப்படையாக எல்லோரும் பார்க்ககூடிய வகையிலும் விகாரமாகவும் தெரியும்; தோல் பரப்பின் அடியில் சிறிய வடிவத்தில் அமைந்திருந்தால் பிறர் பார்வைக்குட்படாத போதிலும் வலியை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். சிலருக்கு இவ்வலி மணிக்கட்டுப் பகுதியில் (Localised)  மட்டும் நிற்கும் சிலருக்கு இவ்வலி கைவிரல்களிலோ, கையிலோ ஊடுருவிப் பரவி வேதனை தரும்.
      
ஆங்கில மருத்துவத்தில் இவ்வீக்கத்திலுள்ள திரவச்சுரப்பை நீக்க, வீக்கத்தை அகற்ற அறுவைச் சிகிச்சை (Gangilonectomy)  வரை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் இச்சிகிச்சைக்குப் பிறகும் இவ்வீக்கம் மீண்டும் வர வாய்ப்புள்ளது.

ஹோமியோபதி மருத்துவத்தின் அறுவைச் சிகிச்சை தவிர்க்கப்படுகிறது. சில பிரத்யோக மருந்துகளும், குணம் குறிகளுக்கேற்ற மருந்துகளும் பயன்படுத்தி நிலையான, நீடித்த பலனைப் பெற முடிகிறது. பக்க விளைவு இல்லாமல், கத்தியோ ஊசியோ காயப் படுத்தாமல், எதிர் உயிரி மருந்துகள் (Anitbiotics)  இல்லாமல், உடம்பில் தழும்பு ஏற்படுத்தாமல் அகவயமான காரணங்களை அகற்றி வீக்கத்தை வற்றச் செய்து . நிரந்தர குணம் பெற முடிகிறது.

 மணிக்கட்டு நரம்பணு முடிச்சு வீக்கத்திற்கும் பயன்படும் முக்கிய மூன்று மருந்துகள் ரூடா (Ruta) பென் ஜாயிக் ஆசிட் (Ben-zonic Acid) சிலிகா (Sililca) வீக்கத்துடன் வலியும் இணைந்து துயரப்படுத்தும் போது ரூடா உயர்வீரியம் அற்புதமான பலன் தருகிறது. இருப்பினும் ரூடா 200C வீரியத்திலேயே சிகிச்சையைத் துவங்கலாம். ஒரிரு வாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாவிட்டால் உயர்வீரியத்திற்கு சென்று பயன் பெறலாம். இவ்வீக்கத்தில் யூரியா அமிலத்தன்மை (Uricacid Diathesis) காணப் பட்டால் பென் ஜாயிக் ஆசிட் மருந்தும் கால்சியப் படிவங்கள் காணப்பட்டால் கல்கேரியா கார்ப் மருந்தும் தேவைப்படுகின்றன.

மருத்துவர் கிளார்க் சல்பர் CM  வீரியத்தில் காலை நேரத்தில் ஒரு வேளை மருந்து மூலம்.. மூன்று வார காலத்தில் மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கத்ஙதைக் குணப்படுத்தலாம் என அனுபவச் சான்றுடன் சுட்டிக்காட்டுகிறார்.

Ganglion  வீக்கத்தைக் குணப்படுத்த ரூடா. பென் ஜாயிக் ஆசிட், சலிகா, சல்பர், கல்கேரியா கார்ப் போன்ற மருந்துகள் மட்டுமின்றி கல்கேரியா புளோர், தூஜா, பாஸ்பரஸ், ஆர்னிகா , ஸடிக்டா, நேட்ரம் மூர் போன்ற மருந்துகளும் உதவுகின்றன.




தலைவலி


தலைவலி தீராத தலைவலியாகிவிட்டது என்று எத்தனையோ பேர் அலுத்துக் கொள்வதை நம் காதால் கேட்க முடிகிறது. இந்தத் தலைவலியை ஹோமியோபதி மருந்துகள் மூலம் நிரந்தரமாக குணப்படுத்த முடியும்.

தலைவலிக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் டாக்டருடன் கலந்தாலோசித்து பொறுமையாக வைத்தியம் செய்து கொண்டால் நிச்சயம் குணப்படுத்த முடியும். தலைவலியில் பல வகைகள் உள்ளன.

1.
GASTRIC HEADACHE
2.
NERVOUS HEADACHE
3.
SINUS HEADACHE
4.
RHEUMATIC HEADACHE
5.
MIGRAIN
6.
SUN HEADACHE போன்றவை குறிப்பிடத்தக்கவைகளாகும்.

ஓய்வின்றி உழைக்கும் மக்கள் மத்தியில் கோபம், emotion, tension அதிகமாக உண்டாகிறது. அலுவலகங்களில் தொடர்ந்து அதிக வேலைகளில் (mental exertion) ஈடுபடுவோருக்கு தலைலி வந்தால், தலை விரிவடைவதைப் போல (expanding) ஒரு உணர்வு இருக்கும். தலையை துணியால் இறுக்கிக் கட்டிக் கொண்டால் பரவாயில்லை என்ற அறிகுறிகள் இருந்தால் Arg.nit என்ற மருந்தை கொடுப்பதன் மூலம் குணப்படுத்தலாம். இதற்கு Bryonia, Pulsatilla, Belladonna போன்றவையும் நல்ல மருந்துகளாகும்.

வெய்யிலில் அலைவது, சிகரெட் குடிப்பது, மூளைக்கு அதிக வேலைப்பளு, திடீரென்று ஒரு துயரச் சம்பவத்தைக் கேட்ட அதிர்ச்சி போன்ற காரணங்களால் தலைவலி வந்தால் வலி கழுத்து பகுதியில் ஆரம்பித்து உச்சந்தலை, நெற்றிப் பகுதிக்கு பரவினால் Gelsemium என்ற மருந்து கொடுத்து குணமாக்கிவிடலாம்.

ஜீரணிக் கோளாறு, பித்தம், மலச்சிக்கலுடன் தலைவலியும் சேர்ந்து வருவதற்கு Nux.Vomica, Bryonia, Lac.def, Pulsatilla போன்றவை நல்ல மருந்துகளாகும்.

ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு ஹோமியோபதி மூலம் நிச்சயம் நிரந்தர குணமளிக்க முடியும். வலது பக்க தலைவலிக்கு Sanguinaria, Silicea, Iris Versicolor, Cedron போன்றவை மிகச் சிறந்த மருந்துகளாகும். இந்த மருந்துகள் மூலம் பல வருடமாக தலைவலியால் கஷ்டப்படுபவர்களைக் குணப்படுத்த முடியும்.

இடது பக்கத் தலைவலிக்கு Nat.mur, Spigelia, Sepia, Thuja, Onosmodium போன்றவை மிகச் சிறந்த மருந்துகள். அறிகுறிகளுக்கேற்ப உரிய மருந்தை சரியாக தேர்வு செய்து நோயாளியின் மன குண நிலையும் கவனித்துக் கொடுக்கும்போது நிச்சயமாக குணமாகிறது.

கணவன், மனைவி குழந்தைகள் என்று குடும்ப சகிதமாக பேருந்தில் பயணம் செய்துவிட்டு, சுற்றுலா தளங்களையும், கடைகளையும் மகிழ்ச்சியோடு சுற்றிப் பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பியதும் பெரும்பாலோர், குறிப்பாக பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அதிக சோர்வினாலும், பெட்ரோல், டீசல் போன்ற வாசனைகளை நுகர்வதாலும் தலைவலி வருகிறது. இதற்கு Sepia, Epiphegus போன்ற மருந்துகள் உகந்தது. அதிக சோர்வால் தலைவலி ஏற்படுகின்றவர்களுக்கும் Cocculus, Glonoine போன்ற மருந்துகள் கொடுத்து வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியரில் பலர் தலைவலியால் அவதிப்படுவதைப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க mental strain செய்வதாலும், குழந்தைகளின் சப்தங்களுக்கு நடுவில் எப்போதும் இருப்பதாலும், தலைவலி வந்து கஷ்டப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு Scutalaria என்ற மருந்தைக் கொடுத்தால் தலைவலி குறைந்து நாளடைவில் பரிபூரண குணம் கிடைக்கிறது. இதுபோன்ற தலைவலிக்கு Acid.pic -ம் நல்ல மருந்தாகும்.

பள்ளி மாணவ மாணவியர் அதிகமாக படிக்கும்போது Eye Strain மூலம் தலைவலி வந்தாலும் ஹோமியோபதி மருந்துகளான Nat.mur, Calc.phos, Acid.phos, Ruta போன்ற குறிகளுக்கு (Symptoms) ஏற்ப தேர்வு செய்து கொடுத்தால் முற்றிலும் குணப்படுத்தலாம்.